தெருப்பெயர் பலகை

திருநெல்வேலியின் பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதானம் பின்புறமுள்ள தெரு ஒன்று அங்குள்ள பிரசன்ன விநாயகர் கோயில் பெயரால் ‘பிரசன்ன விநாயகர் கோயில் தெரு’ என அழைக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி அத்தெருவில் நிறுவிய சாலை பெயர் பலகையில் ‘உணவு சாலை’ என புதிதாக பெயர் சூட்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்து முன்னணியும் நெல்லை மாநகராட்சியின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ‘உணவு சாலை’ என்ற பெயர் பலகையை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. விரைவில், பழைய பெயருடன் புதிய பெயர் பலகை வைக்கப்படும் என நம்புவோம்.