காற்றில் பறந்த சமூகநீதி

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் இருக்கும் சமையல்காரர்களை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தனது வீட்டு வேலைக்காரர்களாகப் பணியமர்த்திருப்பதாகவும், அவர்களை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தனது வீட்டில் வேலை செய்ய நிர்பந்திப்பதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலஜி விவகாரமே இன்னும் முடியாத நிலையில், சமூக வலைதளங்களில் தீபாவளிப் பட்டாசாக இந்த விவகாரமும் வெடித்துக் கொண்டிருக்கிறது.