பாதுகாப்பில் குறைபாடு

உத்தர பிரதேசத்தில் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஆடிட்டோரியத்தில் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தது. அவர் வருவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக, அங்கு உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் ஒரு நபர் வந்திருந்தார். அவர் அரங்கத்திற்குள் நுழைந்தவுடன் துப்பாக்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். அவருடைய அடையாளமும் உறுதி செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாடு சம்பந்தமாக, ஏழு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது என பஸ்தி மாவட்ட காவல் ஆணையர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.