சணல் பொருட்கள் பயிற்சி

மத்திய அரசின் தேசிய சணல் வாரியம், சணல் பொருட்கள் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், சணல் பொருட்களுக்கான பயிற்சி, வடிவமைப்பு, உற்பத்தி, மூலப் பொருட்களையும் வழங்குகிறது. இதற்காக 49 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சணல் அலங்கார பொருட்கள் உற்பத்தி மற்றும் பயிற்சி திட்டங்களில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தேசிய சணல் வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிய, www.jute.com என்ற இணையதளத்தை அணுகலாம். அல்லது 044 2462 0059 / 94444 59448 என்ற எண்களை அழைக்கலாம். வரும் ஐந்து ஆண்டுகளில் 18 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சணல் அலங்கார பொருட்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம், சர்வதேச சணல் கண்காட்சி மற்றும் தேசிய, மண்டல கண்காட்சிகளில் பங்கேற்க உதவிகள் போன்றவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.