முடிக்கப்படும் நிலுவைப் பணிகள்

மத்திய அரசில் நிலுவையில் உள்ளப் பணிகளை முடிப்பதற்காக அக்டோபர் 2 அன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை தமதுக் கட்டுப்பாட்டில் உள்ள 9 துறைகள், அமைச்சகங்களில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட 20 நாட்களுக்கு உள்ளாகவே மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளால் பயன்படுத்தத்தக்க அளவில் சுமார் ஒரு லட்சம் சதுர அடிக்கும் அதிகமான இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான கோப்புகள் மீதான பணிகள் குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் முடிவில் இதன் முன்னேற்றம் குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.