என்.எஸ்.ஜி வாகனப் பயணம்

பாரதத்தின் 75வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாகனப் பயணம் மேற்கொண்டுள்ள என்.எஸ்.ஜி என்ற தேசியப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 12 அதிகாரிகள் மற்றும் 35 கமாண்டோ வீரர்களைக்கொண்ட குழுவினர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி டெல்லியிலிருந்து கார்களில் புறப்பட்டு லக்னோ, வாரணாசி, கொல்கத்தா, புவனேஸ்வர், ஐதராபாத், வழியாக பயணித்து சென்னையை வந்தடைந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லை நெடுகிலும் மக்கள் ஜெய் ஹிந்த், மகாத்மா காந்தி வாழ்க என்று கூறி உற்சாக வரவேற்பு அளித்ததாக அக்குழுவின் தலைவர் கர்னல் உமேஷ் ரத்தோட் தெரிவித்தார். மேலும், தாங்கள், சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை, அகமதாபாத் வழியாக 7,500 கிலோ மீட்டர் பயணித்து மீண்டும் டெல்லி சென்றடைய இருப்பதாகவும் கூறினார்.