வி.சி.கவிடம் அடிவாங்கிய தி.மு.க

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கததை சேர்ந்த தி.மு.க பிரமுகர் மனோகரன், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் ராஜா இத்தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற ராஜாவின் தரப்பினர் மனோகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இருதினங்களுக்கு முன் மனோகரன் வீட்டில் இல்லாதபோது ராஜாவின் ஆட்கள் 10 பேர், மனோகரனின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதுடன் மனோகரன் மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து மனைவியை மருத்துவமனையில் சேர்த்த மனோகரன், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்புக் கோரி மயிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்கள் விரோத சம்பவங்களை தொடர்ந்து  நடத்தி வரும் தி.மு.கவினரையே அவர்களது கூட்டணியினரான வி.சி.கவினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.