என்.எஸ்.ஜி குறித்து அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்.எஸ்.ஜி என்ற தேசிய பாதுகாப்பு படையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், தேசிய பாதுகாப்பு படை ஓர் உலகத்தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படை. நமது வீரர்களை நினைத்து நாடே பெருமை அடைகிறது என வாழ்த்தினார். தேசிய பாதுகாப்பு படையினர், கடத்தல் தடுப்பு, பணய கைதிகள் மீட்பு, பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு, ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த படையில், ராணுவம், துணை ராணுவம், மாநில காவல்துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வீரர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.