பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டம்

பாரதத்தின் காஷ்மீர் மற்றும் அசாமில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் அல்கொய்தா அமைப்பும் தாக்குதல்களை நட்த்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் அம்மாநில காவல்துறைகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அங்குள்ள தனி நபர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், அல்கொய்தா ஹிந்து கோயில்கள், ஹிந்து அமைப்புகள்,  ராணுவப் பகுதிகள், பொதுப் போக்குவரத்தை குறிவைத்து வெடிகுண்டுகள் மற்றும் ஐ.இ.டி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அசாம் காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் விழிப்புடன் நிலையை கண்காணிக்கின்றன. மாநிலத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.