வெளிப்படும் ஹிந்து உணர்வு

ஹிந்துக்களை வஞ்சிக்க திட்டம்போட்டே கொரோனாவை காரணம் காட்டி, வாரத்தில் மூன்று நாட்கள் கோயில்களை மூடி வைத்துள்ளது தி.மு.க அரசு. மக்களிடம் இதனை எதிர்த்து மெல்ல கொந்தளிப்பு எழுந்து வருகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக, நாகர்கோவில் நாகராஜா கோயிலுக்கு, கடந்த 9ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சென்ற, ஆட்டோ டிரைவர்கள் ஜெயராஜ், பாபு ஆகியோர், கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று வழிபட்டுள்ளனர். இது, தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. எங்களை போன்ற எண்ணத்தில் பலரும் உள்ளனர். தொடர்ந்து கோயில் தரிசனத்திற்கு மட்டும் தி.மு.க அரசு தடை ஏற்படுத்தினால் இச்சம்பவம் தொடர்கதையாகும் என அவர்கள் தங்கள் வேதனையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் ஈடுபட்ட ஜெயராஜ், நாகர்கோவில் பா.ஜ.க மகளிர் அணித் தலைவியின் சகோதரர்.