நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம்

11 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான இரண்டாம் கட்ட முயற்சியை நிலக்கரித்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. இவற்றை ஏற்கனவே ஏலம் விடும் முயற்சி கடந்த மார்ச் 25ம் தேதி நடந்தது. இந்த முயற்சி வெற்றி பெறாததால் இவற்றை இரண்டாம் முறையாக ஏலம் விடுவதற்கானக் கூட்டத்தை நிலக்கரித்துறை அமைச்சகம் நடத்தியது. இதில் ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வருவாய் பங்கு சதவீத அடிப்படையில் இந்த ஏலம் ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும். இவற்றை ஏலம் எடுப்பவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து ஒப்பந்த ஆவணங்களைப் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.