தொடரும் ஹிந்து படுகொலைகள்

ஸ்ரீநகர் ஈத்கா பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சதீந்தர் கௌர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோர் நேற்று காலை அடையாளம் தெரியாத ஜிஹாதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அண்மை காலமாக காஷ்மீரில் ஹிந்துக்கள் குறிவைத்து தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தொழில் செய்திட வந்தோர், அரசுப்பணிகளில் சேர்ந்திட்டோர், 90 களில் விரட்டியடிக்கப்பட்ட ஹிந்து பண்டிட்டுகள் உள்ளிட்ட எந்த மாற்று மதத்தவரும் காஷ்மீரில் குடியேறிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் இந்த படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் ராணுவமும் காவல்துறையும் கண்டறிந்து தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.