ரஃபேல் ஸ்டெல்த் ஏவுகணை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சு 30, ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன. அப்போது ரஃபேல் விமானத்தை எடுத்த புகைப்படங்களை இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அவற்றில் ரஃபேல் விமானத்தில் பொருத்தபட்டு இருந்த மைகா மற்றும் ஸ்கால்ப் -இ.ஜி அல்லது ஸ்டார்ம்ஷேடோ என்றழைக்கப்படும் ஸ்டெல்த் ரக அதிநவீன ஏவுகணை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைத்தவிர மைகா-இ.ஆர், மைகா இ.எம் வகை ஏவுகணைகளும் விமானத்தில் இடம்பெற்றிருந்தன.