புதிய வீடியோ ஆதாரம்

அக்டோபர் 3ம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் விவசாயிகள் உட்பட 8 பா.ஜ.கவினர் கொல்லப்பட்டனர். ஒரு ஓட்டுநர் அடித்து கொல்லப்பட்டார். இரண்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், பா.ஜ.கவினரின் வாகனம் தாக்கியதில் 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டது. அது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் வாகனம் கூட்டத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்து மோதுவதற்கு முன்பே வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், கார் ஓட்டுனர் காயம் அடைந்து, உடைந்த கண்ணாடியால் சரியாக பார்க்கமுடியாமல் இந்த விபத்து நிகழ்ந்து இருந்திருக்கலாம் அல்லது திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வீடியோ இத்தனை தாமதமாக வெளியானதும் இதில் விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் சதித் திட்டம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.