மிரட்டும் முன்னாள் எம்.எல்.ஏ

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லடிகுப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் பா.ம.க வல்லம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர். ஏகே. இன்பிரா என்ற பெயரில் கட்டுமான தொழில், ரியல் எஸ்டேட், சாலை பணிகளுக்கான பொருட்களை சப்ளை செய்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி 20க்கும் மேற்பட்ட நபர்கள் அவரது அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் கார்கள், அலுவலக கண்ணாடிகள், கணினி, சிசிடிவி எல்லாம் உடைக்கப்பட்டன. புகாரின் பேரில் வந்தவாசியை சேர்ந்த பாபு, நரசிம்மன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சாலை பணிக்காக பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார், மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டு தன்னை மிரட்டுகிறார். பணம் தராததால், கணேஷ்குமார் தூண்டுதலின் பேரிலேயே அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு ஏழுமலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.