காங்கிரசை மூழ்கடிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதி ஒன்றின் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ‘நல்ல நிலைமையில் போய் கொண்டிருந்த பஞ்சாப் ஆட்சிக்கு ராகுல் இடையூறு ஏற்படுத்தினார். நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்த அமரிந்தர் சிங்கை, நவ்ஜோத் சிங் சித்துவிற்காக பதவியிலிருந்து நீக்கினர். ஆனால் தற்போது சித்துவும் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓடிவிட்டார். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியை மூழ்கடிப்பதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்’ என கிண்டலாக விமர்சனம் செய்தார்.