சட்ட சிக்கலில் ஜாவேத் அக்தர்

தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த மும்பையை சேர்ந்த சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், தலிபான்களை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் வி.ஹெச்.பியுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. வழக்கறிஞர் விவேக் சம்பனேர்கர், இதனை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜவேத் அக்தருக்கு விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.