ஓதுவார் பயிற்சி

ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயில்களில் திருமுறைகளைக் குறைவின்றி ஓதிட ஏதுவாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இதில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சி பெற விரும்புவோர், ஹிந்து மதத்தை சேர்ந்தவராகவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 20 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். குரல் வளம், உடல் வளம் உடையவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhrce.gov.in என்ற ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் அக்டோபர் 27க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.