சட்டவிரோத சர்ச் கட்டுமானம்

திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே உள்ள சேனாபதி பாளையத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டும் பணிகள் நடைபெற்றன. இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. கட்டுமானப் பணிகள் தொடர்ந்தன. இதனையடுத்து சட்டவிரோத சர்ச் கட்டுமானத்தை தடுத்து நிறுத்தக்கோரி இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.