சரணடைந்த பயங்கரவாதி

டெல்லியில் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில்ளில் ஒருவனான பயங்கரவாதி ஒசாமாவின் மாமா ஹேமுத் ரஹ்மான், உத்தர பிரதேசத்தின்  பிரயாக்ராஜில் காவல்துறையிடம் சரணடைந்தார். டெல்லி காவல்துறை, ‘ரெஹ்மான் பாகிஸ்தானால் ஏற்பாடு செய்து தரப்பட்ட வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கரவாத பொருட்களை மேம்படுத்துவது, வெடிபொருட்களை கொண்டு செல்வதில் உதவி செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார். இவர்கள் நாடு முழுவதும் கொலைகள், குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர். மும்பை குண்டுவெடிப்புகளைப் போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் வெடிகுண்டுகளை வைக்கும் நோக்கில் செயல்பட்டனர்’ என தெரிவித்துள்ளது.