புதிய ஆளுனருக்கு வாழ்த்துகள்

தமிழகத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்ற பின் தமிழில் வணக்கம் கூறி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, ‘பாரம்பரியமிக்க கலாசாரம் கொண்ட தமிழகத்தின் ஆளுனராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. தமிழக மக்கள், அரசின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். தமிழ் மொழியை கற்பேன், சிறிது காலம் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளேன். தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன். அரசியல் அமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டு எனது பணிகள் இருக்கும். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டதுடன் கட்டுப்படுத்தியும் உள்ளது. தமிழக அரசின் ஒட்டு மொத்த செயல்பாடு குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது’ என்று கூறினார்.