பிரபுபாதா நினைவு நாணயம்

இஸ்கான் என்ற அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் நிறுவியவர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா. அவரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு, நிகழ்ச்சியில் உரையாற்றினார். சுவாமி பிரபுபாதா சுமார் 100 கோயில்களை நிறுவியுள்ளதுடன், உலகிற்கு பக்தி பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். உலகிற்கு பக்தி பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பி வரும் இஸ்கான், ஸ்ரீமத் பகவத் கீதை உள்ளிட்ட இலக்கிய நூல்களை 89 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.