சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமம்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கரமடத்தின் சங்கராலயத்தில் நமது நாட்டில் பரவியுள்ள நோயினை அகற்றவும், பொருளாதார தேக்கத்தில் இருந்து மீண்டு வரவும் ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், உலக நன்மைக்காகவும், சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமங்கள், நடைபெற்றன. ‘சுதேசி’ பத்திரிகையின் சார்பில் இந்த ஹோமங்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், ‘நம் தேசத்தின் இன்றைய நிலை மாற வேண்டும். நம்மை என்னென்ன துன்பங்கள் சூழ்ந்துள்ளன, அவை யாரால் ஏற்படுகின்றன என்பதை அறிந்து பரிகாரம் தேட வேண்டும். பகவான் கிருஷ்ணர், ‘தர்மத்தை காக்க நான் வருவேன்’ என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. நாம் முயற்சிக்காமல் பகவான் வருவார் என கைகட்டி நின்றால் அழிந்தே போவோம். பல கட்சிகளுக்கு தேசத்தை பற்றி அக்கறை இல்லை. நமக்கு தேசப் பற்று மட்டுமே இருக்க வேண்டும், கட்சி உணர்வு கூடாது. சுப்பிரமணிய சுவாமி அசுரர்களை அழித்தது போல, நாட்டை அழிப்பவர்களிடம் இருந்து காக்கவே இந்த யாகம், ஹோமம் எல்லாம்’ என கூறினார்.