ரிலையன்ஸ் தடுப்பூசி

முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ரிலையன்ஸ் லைப் சயின்சஸ்’ இரண்டு ‘டோஸ்’ செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. அதன் முதல் கட்ட மருத்துவ பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட சோதனை 58 நாட்கள் நடைபெறும். இச்சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின், இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறது.