வீடியோ ஆதாரம் வெளியிட்ட அ.தி.மு.க

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சையன், மனோஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இவர்களிடம் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சட்டசபையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அ.தி.மு.க சட்டமன்ர உறுப்பினர்கள் இதற்காக போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், கைதான சையன், மனோஜ், பத்திரிகையாளர் பிரதீப் ஆகியோர், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைப்பது பற்றி பேசிய ‘வீடியோ’ ஆதாரம் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.