செங்கோட்டைக்குள் நுழைய சதி

சுதந்திர தினத்தன்று லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள், டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இதனை அடுத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது டெல்லியின் வழிபாட்டு தலங்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை உருவாக்கவும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் சிலர், டெல்லி செங்கோட்டைக்குள் காவல்துறை அதிகாரிகள் வேடத்தில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.