பத்திரிகையாளர் படுகொலை

பீகாரில் சுதர்சன் நியூஸ் தொலைகாட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் மணீஷ்குமார் சிங் படுகொலை செய்யப்பட்டார். பீகாரில் மத்லோஹியார் கிராமத்தில் உள்ள காச்சி தோலா செவார் என்ற நீர் நிலையில் இருந்து அவர் உடல் மீட்கப்பட்டது. அவருக்கு இதற்கு முன்பாக வந்த சில கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கொலைத் தொடர்பாக, முகமது அர்சாத் ஆலம், அமரேந்திர சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு நிலத்தகராறுதான் காரணம் என காவல்துறை கூறுகிறது. மணீஷ்குமார் சிங்கின் தந்தை சஞ்சய் சிங், ஒரு மற்றும் அரேராஜ் தர்ஷன் என்ற ஒரு உள்ளூர் செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆர்.டி.ஐ ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.