கோயிலுக்குள் செருப்பணிந்த மருத்துவர்

வேலூர் மாவட்டம் பொய்கை பகுதி முத்தாலம்மன் கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ரெஜினா என்ற பெண் மருத்துவர், கோயிலின் கருவறை அருகே செருப்பு அணிந்துகொண்டு அமர்ந்திருந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ரெஜினாவிடம் ஏன் கோயிலுக்குள் செருப்பணிந்து வந்தீர்கள் என கேட்டபோது, கோயிலுக்குள் செருப்பு போட்டுக்கொண்டு வரவேண்டாம் என போர்டு வைத்து உள்ளார்களா? என திமிராக பேசியுள்ளார். மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவர் வெளியேறினார். இவர்மீது துறை ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.