தமிழக அரசின் ஓரவஞ்சனை

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் பிரசித்த பெற்ற ஹிந்து ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மதங்களை சார்ந்த வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான வழிபாடுக நடத்தப்படுகின்றன. அதற்கு தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் ஹிந்து கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபட தடை செய்துள்ளது. இதனை கண்டித்து நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், குமாரகோவில், முருகன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களின் முன்பு நேற்று மாலை பா.ஜ.கவினர், பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.