முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, அமைச்சராக இருந்தவர் சௌத்ரி பஷீர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சவுத்ரி பஷீரின் மூன்றாவது மனைவி நக்மா, சமீபத்தில் சமூக வலைதளத்தில் ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சௌத்ரி பஷீருக்கு நாங்கள் ஐந்து பேர் மனைவியர் உள்ளோம். தற்போது, ஷயிஸ்டா என்ற பெண்ணை ஆறாவது திருமணம் செய்ய உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தினார். முத்தலாக் கூறி வீட்டை விட்டு துரத்தினார். அவரை திருமணம் செய்தது முதலே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார். பெண்களை துன்புறுத்துவதில் விருப்பம் உடையவர் அவர்’ என்று கூறினார். இதையடுத்து முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சௌத்ரி பஷீர் மீது, உ.பி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.