பலாத்கார பாதிரி மனு தள்ளுபடி

கேரளாவின் கொட்டியூரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாக பணியற்றியவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அங்கு பணிபுரிந்து வந்த ஒரு மைனர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதுகுறித்த புகாரில் பாதிரியை காவல்துறை கைது செய்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கேரள நீதிமன்றம் பாதிரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவரது மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது. அந்த பெண் தற்போது மேஜர் ஆகிவிட்டதால் அவரை மணக்க தனக்கு ஜாமீன் கேட்டு பாதிரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல அந்த பெண்ணும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிடமுடியாது என கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.