இஸ்ரோ உளவு விவகாரம்

கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ விசாரணையில் நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு இவ்வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்பதும் இந்த பொய் குற்றச்சாட்டுக்கு சில காவல் அதிகாரிகள்தான் காரணம் என்பது தெரியவந்தது. முன்னாள் கேரள காவல் அதிகாரிகள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட முன்னாள் புலனாய்வு துணை இயக்குனரும் குஜராத் முன்னாள் டி.ஜியுமான ஸ்ரீகுமார் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளது.