தோற்றால் கழுத்தறுப்பேன்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘வரும் உள்ளாட்சித் தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல். உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியாக வேண்டும். அதில் தோல்வி அடைந்தால் கட்சி ஒன்றிய செயலர்கள் கழுத்தை அறுத்து விடுவோம். தி.மு.க.,வுக்கு துரோகம் செய்யும் கட்சியினர் வாழ மாட்டார்கள். எதிர்காலத்தில் உருப்பட மாட்டார்கள். தேர்தலில் துரோகம் செய்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். துரோகிகளை கேட்க நாதி இருக்காது. தலைமை அறிவிக்கிற வேட்பாளர்களை, வெற்றி பெற வைக்க வேண்டும்’ என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தி.மு.கவினரிடமும் மக்களிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.