வைப்புத்தொகை காப்பீடு உயர்வு

மத்திய அரசு, வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீடு, கடன் உத்தரவாதக் கழக (டி.ஐ.சி.ஜி.சி) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, வங்கி திவால் ஆனாலோ தடைக்கு உள்ளானாலோ வங்கி வைப்பு நிதி வாடிக்கையாளர்கள்  90 நாட்களுக்குள் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்படி, ஒவ்வொரு வைப்பு நிதி கணக்குக்கும் ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் 93.5 சதவீத வைப்பு நிதி கணக்குகள் மற்றும் 50.9 சதவீத வைப்பு நிதி மதிப்பு இதற்குள் அடங்கிவிடும். இந்த சட்டத்தின் கீழ் பாரதத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கி வைப்பு நிதிகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.