வி,ஹெச்.பி புத்தகம் வெளியீடு

புதுவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகத்தின் மாநில செயற்குழு நடைபெற்றது. அகில பாரத சந்யாஸிகள் சங்கம் ஸ்தாபகர் ராமானந்தா சுவாமி, அகில பாரத இணை பொதுசெயலாளர் ஸ்தாணுமாலயன், தென்பாரத அமைப்பாளர் P.M.நாகராஜன், அகில பாரத இணை செயலாளர் சத்யம் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு சமயத்தில் காஞ்சி பெரியவா பூஜ்ய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  ஆற்றிய உரை புத்தகமாக வெளியிடப்பட்டது.