கோயில் நிலம் மீட்க கோரிக்கை

ராமநாதபுரம் சர்க்கரை கோட்டை பகுதியில் அக்னி வீரபத்திர ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமாக சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த கோயில் நிலத்தை சலீம்கான், முஸ்தபா மற்றும் காதர் தாஸ் திருமண மஹால் உரிமையாளர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று பூஜாரி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2013ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கோயில் நிலங்கள் தற்போதுவரை மீட்கப்படவில்லை. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டி வருவாய் ஈட்டி வருகின்றனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.