ராணாவை நாடு கடத்தலாம்

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை பாரதத்திற்கு நாடு கடத்த அமெரிக்காவில் நடைபெறும் வழக்கில், அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‘மும்பை தாக்குதலில் ராணாவுக்கு நெருங்கிய தொடர்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரதத்திற்கு ராணாவை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து காரணங்களும் சரியாக உள்ளன. அதனால் அவரை நாடு கடத்த உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். எனவே, அமெரிக்க நீதிமன்றம் இது குறித்த உத்தரவை வெளியிடும்பட்சத்தில் அவர் உடனடியாக பாரதத்திற்கு நாடு கடத்தப்படுவார் என தெரிகிறது.