புத்தகம் எழுதியவருக்கு கொலை மிரட்டல்

பிரபல பொது அறிவுஜீவி, கல்வியாளர் மற்றும் கேரள பா.ஜ.க துணைத் தலைவர் டாக்டர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘லவ் ஜிஹாத்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதனால் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவர் எழுதிய இந்த புத்தகம் ‘லவ் ஜிஹாத்’ குறித்த ஆய்வின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. இதற்காக குர்ஆனிலிருந்து விரிவான பல மேற்கோள்கள் இப்புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சௌதி அரசின் அதிகாரபூர்வ மத அதிகார அமைப்பால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.