கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

இணையத்தில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிடுவது தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், ‘இதுதான் பாலிவுட்டின் அடிப்பகுதி. இங்கு இப்படிதான் பல காலமாக நடக்கிறது. இது பாலிவுட் அல்ல ‘புல்லிவுட்’. ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர் போன்றோரும் பாலிவுட்டை சீரழிக்கின்றனர். திரைத்துறைக்கென்று ஒரு வலுவான மதிப்பு, மனசாட்சி தேவை’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, பாலிவுட் நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ராஜ் குந்த்ராவின் காரணமாகத்தான் பாலியல் சம்பந்தப்பட்ட படங்களில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.