சி.எஸ்.ஐ நிதி முறைகேடு மோதல்

கோயம்புத்தூரில் உள்ள சர்ச் ஆப் சௌத் இந்தியா (சி.எஸ்.ஐ) என்ற கிறிஸ்தவ அமைப்பின் கூட்டம், ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் அப்பசாமி கல்லூரியில் நடைபெற்றது. இதில் அங்கு நடக்கும் நிதி முறைகேடுகள் குறித்த காரசார விவாதத்தின்போது, இரண்டு குழுவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கூட்டத்தில் இருந்து சில உறுப்பினர்கள், குழுவின் உறுப்பினரும் வழக்கறிஞருமான நேசமர்லின் மீது தாக்குதல் நடத்தினர். மைக் ஸ்டாண்டால் அவர் தாக்கப்பட்டார். இதனால் அவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நேசமர்லின், தன் மீதான தாக்குதல் குறித்து ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் சார்லஸ் ஜேக்கப், பரமானந்தம் உள்ளிட்ட சிலருக்கு எதிராக இது குறித்து புகார் அளித்துள்ளார்.