வி.ஹெச்.பி தீர்மானம்

ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் புதிய அகில உலக தலைவராக பத்ம ஸ்ரீ டாக்டர் ரவீந்திர நாராயண் சிங், செயல் தலைவராக அலோக் குமார், அகில உலக பொதுச்செயலாளராக மிலிந்த் பராண்டே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சில முக்கியத் தீர்மானங்களும் அப்போது நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக ‘தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு தீர்மானிக்கிறது. ஏன் அதனை அரசு தீர்மானிக்க வேண்டும்? அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, வலுக்கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் கடுமையான சட்டத்தை மத்திய அரசு இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது’ என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்தார்.