கோயில் நிலங்கள் மீட்பு

திருப்பூரில் உள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் நாகேஸ்வரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை மூன்று பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதைத்தவிர, இதே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 78 லட்சம் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை 4 பேர் ஆக்கிரமித்திருந்தனர். பொன்னாபுரம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நிலங்களை மீட்டனர். இந்த இடங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.