கோயில் நிலத்தில் வாகன நிறுத்த கட்டணம்

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிக்கிறார். இதனை தடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த  நீதிபதிகள், அறநிலையத் துறையின் கீழ், இந்தக் கோயில் வருகிறது. எனவே அறநிலையத் துறை மட்டுமே கோயில் சொத்துக்களை கையாள முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகனங்கள் நிறுத்துவதற்கு பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதுவரை வசூலித்த தொகைக்கான கணக்கை ரசீதுடன் தாக்கல் செய்ய வேண்டும். வசூலித்த தொகையையும் அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.