மூன்றாவது அலை குறித்து ஐ.சி.எம்.ஆர்

கொரோனா மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சின் தொற்று நோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறும்போது, ‘முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. புதிய உருமாறிய வைரஸும், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் வேகம் மிக்கதாகவும் உள்ளது. அவசரகதியில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மாநிலங்கள் விலக்கிக் கொள்கின்றன. இதனால் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் இறுதியில் மூன்றாவது அலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் இரண்டு அலைகளைப் போல இது தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை’ என தெரிவித்துள்ளார்.