நடிகை மீது அவதூறு வழக்கு

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், தனது இரண்டு மகப்பேறு கால அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் வைத்த பெயர் ‘பிரகனன்சி பைபிள்’. வெளியாகும் முன்பே, பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்பார்ப்பையும் இந்த புத்தகம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள ‘ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்’ என்ற கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான ஆஷிஷ் ஷிண்டே, காவல் நிலையத்தில் இந்த புத்தகத்தின் தலைப்பு, கிறிஸ்தவ மத புனித நூலான பைபிளையும் கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளையும் புண்படுத்துகிறது எனவே, கரீனா கபூர் கான் மீது ஐ.பி.சி பிரிவு 295-ஏ’வின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரி புகார் மனு அளித்துள்ளார்.