சட்டவிரோத கிறிஸ்தவ மறுவாழ்வு மையம்

பெங்களூரு சிக்கபெல்லந்தூரில் அமைந்துள்ள ‘ஷாலோம் விவிலிய பாப்திஸ்ட் சர்ச்’ கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இருந்து நான்கு பெண் குழந்தைகள் உட்பட ஐந்து குழந்தைகளை ‘சைல்ட்லைன் இந்தியா’ அறக்கட்டளை மீட்டுள்ளது. அவர்கள் இந்த மையத்தை நடத்தத் தேவையான உரிய அனுமதியோ அல்லது பதிவோ இல்லாமல் சிறுவர், சிறுமியர் என மொத்தம் 14 பேரை அடைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு காவல்துறையினர் ஷாலோம் விவிலிய பாப்டிஸ்ட் சர்ச் மற்றும் அதன் தலைவர்கள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீட்பு மையத்தில் ஒரு பெண் பராமரிப்பாளர் கூட இல்லை என்று சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை குற்றம் சாட்டியது.