தி.மு.கவினர் வாரிசுகள்

தி.மு.கவையும் வாரிசு பிரச்சனையையும் எக்காலத்திலும் பிரிக்கமுடியாது. அது தொடர்கதை. இதற்குகு பல்லாயிரம் உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில், பாளையங்கோட்டையில் எண்ணாயிரத்தம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது தி.மு.க ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியனின் மகன் சுபாஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சுபாஷ், தன் அடியாட்களுடன் பூபதி வீட்டிற்கு சென்று அவரை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளார். அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து  சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்து பூபதி அளித்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், கடலூர் மாவட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவரான கொளஞ்சி நாதனின் மகன் வசந்த குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் அவர் எதிர் வீட்டு பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இதனால் கர்பமடைந்த அந்த பெண் திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக, அப்பெண்ணுக்கு சில ஆட்கள் கருக்கலைப்பு செய்துள்ளார் வசந்த குமார். இதனால் ரத்தப்போக்கு அதிகமாகி அந்த பெண் இறந்துவிட்டார். இதனையடுத்து, வசந்த குமார் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.