பி-8 விமானம் பாரதம் வந்தது

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பி-8ஐ போர் விமானங்களை 2013ல் கொள்முதல் செய்தது மத்திய அரசு. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை, பேரிடா் மீட்புப் பணியிலும் இவை சிறப்பாக செயல்படும். பாரதத்தின் கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையின் தேவையையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து 9வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் வந்தது. தற்போது 10-வது போர் விமானம் பாரதம் வந்தடைந்தது.