பிராந்திய மொழிகளில் தேர்வு

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை – 1 ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். மற்ற வங்கித் தேர்வுகள் அனைத்தும் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பிராந்திய மொழிகளில், தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 15 நாட்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும். அதுவரை வங்கியில் ஆட்சேர்ப்பு நிறுவனத்தால் துவங்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.