காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைது

வளர் இளம் பருவத்தில் உள்ள இளைஞர்களை மயக்கி தீவிர மதக் கருத்துக்களை அவர்கள் மனதில் புகுத்தி ஜிகாத் போரில் ஈடுபடத் தூண்டிய உமர் நிசார், தன்வீர் அஹமத் பட், ரமீஸ் அஹ்மத் லோன் ஆகிய மூன்று பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. கைது செய்தது. முன்னதாக, உ.பி., மேற்கு வங்கம், கேரளா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களை அண்மையில் என்.ஐ.ஏ. தொடர்ந்து கைது செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.